ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ராம நவமியிலிருந்து ராமர் கோயிலுக்கு

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நடந்துள்ள மோதல்கள் மக்களை பிளவுபடுத்துவதற்கான புதிய முயற்சிகளை காட்டுகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

சமீபத்தில் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த வகுப்புவாத மோதல்களை பார்க்கிற போது வரவிருக்கும் 2019 பொதுத் தேர்தலில் உடனடிப் பலன் கிடைக்க தனது பழைய தந்திரத்தை, அதாவது மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் தந்திரத்தை பாராதீய ஜனதா கட்சி கையிலெடுப்பது போல் தோன்றுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ராம நவமி கொண்டாட்டங்களை ஒட்டி முஸ்லிம்கள் மீது தீவிரம் குறைந்த தாக்குதல்கள் அடுத்தடுத்து பல நடந்துள்ளன. சமூக ஊடகங்களும் கட்சியின் அமைப்பு ரீதியான பலமும் இதற்கு புத்திசாலித்தனமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ராம நவமி கொண்டாட்டங்கள் இளைஞர்களால் இரு சக்கர மோட்டார் வாகனங்களில் வாட்களையும் காவிக் கொடிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆக்ரோஷத்துடன் நடத்தப்பட்டன. ஒரே மாதிரியாக இந்த ஊர்வலங்கள் அனைத்தும் நன்கு திட்டமிட்டு மதப் பாடல்கள் மற்றும் முழக்கங்களுடன் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் தொடங்கின. பின்னர் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளின் ஊடாக சென்று மிகவும் வெளிப்படையான வகுப்புவாத தன்மை கொண்ட பாடல்கள் முழக்கங்களுடன் சென்றன. இதன் நோக்கம் வெளிப்படையானது. இத்தகைய பல ஊர்வலங்கள் உள்ளூர் சங் பரிவார தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் நடத்தப்பட்டன. அண்டை மாநிலங்களான உத்திர பிரதேசம், ஜார்கன்ட் ஆகியவற்றிலிருந்து வந்த சங் பரிவாரத்தினர் இவற்றில் கலந்துகொண்டனர்.

Dear Reader,

To continue reading, become a subscriber.

Explore our attractive subscription offers.

Click here

Or

To gain instant access to this article (download).

Pay INR 50.00

(Readers in India)

Pay $ 6.00

(Readers outside India)

Back to Top