‘‘மாபெரும் ரஷ்யப் புரட்சி 1917-21’’ மற்றும் லெனினிசம்
உள்நாட்டுப் போரின் போது நுழைந்துவிட்ட மோசமான சீர்கேடுகளைக் சரிசெய்வதில் தோல்வியடைந்துவிட்டது லெனினிசம்
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
பெர்னார்ட் டி மெல்லோ எழுதுகிறார்
கட்டுரையின் தலைப்பில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் பகுதி போல்ஷ்விக்குகள், 1917ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போர் குறித்த தலைசிறந்த வரலாற்றாசிரியரான அலெக்சான்டர் ராபினோவிட்ச்சிடமிருந்து பெற்றது. இந்த ‘‘ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு சிறப்பிதழில்’’ அவரது கட்டுரையும் வெளியாகியிருக்கிறது. ராபினோவிட்ச், ரெக்ஸ் ஏ வேட் (இவரது கட்டுரையும் இந்தச் சிறப்பிதழில் வெளியாகியிருக்கிறது) மற்றும் பலரின் ஆய்வுகள் வெளிவந்திருக்கும் நிலையில் புரட்சியைப் பற்றி ஊடகங்களில் வரும் தவறான சித்தரிப்புகளை மறுக்க வேண்டிய அவசியமில்லை. 1917-21 காலகட்டம் குறித்த ஆவணங்கள் 1991லிருந்தே ஆய்வாளர்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்தபோதிலும் எதிர்பார்த்ததைப் போலவே புரட்சியைப் பற்றி முன்னர் மேலோங்கியிருந்த கருத்துக்களே, சித்தரிப்புகளே தொடர்ந்து மேலோங்கியிருக்கின்றன. அதாவது வன்முறைக் கலகத்தின் மூலம் அப்போதிருந்த ஆட்சி தூக்கியெறியப்பட்டு, பெரும் வன்முறை ஆட்சி நிறுவப்பட்டது என்பதே அந்த சித்தரிப்பு. வன்முறைக் கலகம் என்பது ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிரிவினருக்கிடையில் ஆட்சிக்காக (அரசு அதிகாரம்) நடக்கும் ஆயுத மோதல் என்பதே வழக்கமான புரிதல். புரட்சியின் வன்முறை என்பது பலவற்றிற்கிடையில் எதிர்ப்புரட்சியால் கட்டழவிழ்த்துவிடப்படும் வன்முறையின் அளவையும் பொறுத்தது. ரஷ்யாவின் விஷயத்தில் இது பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பல வல்லரசுகளின் தலையீட்டால் வன்முறை அதிகரித்தது. புரட்சியைப் பற்றிய உண்மையான வரலாறு புரட்சியுடன் தவிர்க்கவியாலது சேர்ந்துவரும் எதிர்ப்புரட்சியின் வரலாற்றை குறைத்து மதிப்பிடாது. நவீன காலத்தில் எதிர்ப்புரட்சியின் அடித்தளம் ஏகாதிபத்தியத்தில் இருக்கிறது.